என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்த மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி
    X

    சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்த மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி

    • அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார்.
    • 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார்.

    பாகூர்:

    சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரது மகன் அஸ்வின் (வயது 18). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேர தயாராகி இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வின் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுவையை சுற்றி பார்க்க வந்தார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர்கள் புதுவை நகரப் பகுதியை சுற்றிப்பார்த்து சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு இன்று காலை வாடகை சைக்கிளில் வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 7 பேரும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் 6 பேர் மீண்ட நிலையில் அஸ்வின் மட்டும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரை அப்பகுதி மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அஸ்வினை பிணமாகவே மீட்க முடிந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×