search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-தேனி அகல ரெயில்பாதையில் கல் வைத்ததால் பரபரப்பு
    X

    மதுரை-தேனி அகல ரெயில்பாதையில் கல் வைத்ததால் பரபரப்பு

    • ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார்.
    • உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    மதுரை-தேனி அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து 11 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தேனி மாவட்டத்திற்கு ரெயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரெயில் பயனுள்ளதாக உள்ளது. முதல்கட்டமாக மதுரை-தேனி இடையே சேவை தொடங்கப்பட்டுள்ளது. இப்பாதையை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர். போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் இப்பகுதியில் ரெயில் இயக்குவது சவாலாக உள்ளது என வேதனை தெரிவித்தனர்.

    இதனால் ஊழியர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ஆண்டிபட்டி-உசிலம்பட்டி ரெயில்பாதையில் ஒரு மர்மநபர் தண்டவாளத்தில் கல் வைத்துள்ளார். இதை பார்த்ததும் ரெயில்வே ஊழியர் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதை ஊழியர் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×