search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
    X

    மீட்கப்பட்ட புள்ளிமான். 

    செங்கோட்டையில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

    • 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மீட்புப்பணி வீரர்கள் புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் திவான்மைதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஊர் பொதுமக்களால் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் மீட்புப்பணி வீரர்கள் செல்வம், சந்திரமோகன், செந்தில்குமார், சிவக்குமார், ராஜா, கோமதி சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×