என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா: திருக்கழுக்குன்றத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
- மாடுகளுக்கு கருபிடிப்பை மைக்ரோ கேமரா மூலம் கம்ப்யூட்டர் வழியாக பார்த்து மருந்து கொடுக்கப்பட்டது.
- மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், கருபிடிப்பை மைக்ரோ கேமரா மூலம் கம்ப்யூட்டர் வழியாக பார்த்து அதற்கேற்ப மருந்து கொடுத்தல், குடல்புழு நீக்கம், புரதச்சத்து மருந்து கொடுத்தல், நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் முகாமில் செய்யப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கபட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் ஜெயந்தி, உதவி இயக்குனர் சாந்தி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், ஆர்.டி.அரசு, தமிழ்மணி உட்பட பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் முகாமில் பங்கேற்றனர்.






