என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைவர் சுயம்புலிங்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்த காட்சி.
திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம்
- ராமசாமிபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
- பஞ்சாயத்து செயலர் இந்துமதி நன்றி கூறினார்.
சாயர்புரம்:
திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்தில் இருந்து ராமசாமிபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரளா, ராமசாமியாபுரம் ஊர் தலைவர் சித்திரை சேனன், வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனபாலி, பாஸ்கர், தம்புராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள் குணசேகர், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் இந்துமதி நன்றி கூறினார்.
Next Story






