search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 20-ந் தேதி வரை சிறப்பு முகாம்- கலெக்டர் கலைச்செல்வி தகவல்
    X

    மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 20-ந் தேதி வரை சிறப்பு முகாம்- கலெக்டர் கலைச்செல்வி தகவல்

    • முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது "வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்'', முதற்கட்ட முகாம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறிய பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன. எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேற்கண்ட தகுதிவாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×