என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி-கடம்பத்தூரில் வேனில் கடத்திய 7 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- அரிசி கடத்தலில் ஈடுபட்ட பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமார் உத்தரவின்பேரில் போலீஸ்சூப்பிரண்ட கீதா மேற்பார்வையில், டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலை கிராமத்தில் சமுதாயக்கூடம் அருகே வந்த மினி வேனை தடுத்து நிறுத்த முயன்றனர்.
உடனே சிறிது தூரத்தில் வேனை நிறுத்திவிட்டு டிவைர் தப்பி ஓடிவிட்டார். வேனில் இருந்த கசவ நல்லாத்தூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரகாஷ் என்பவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
இதில் வேனில் 3½ டன் ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது. அவற்றை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல இருப்பதும் தெரிந்தது.
இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் டிரைவர் முரளி மற்றும் வாகன உரிமையாளர் சுந்தர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இதேபோல் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் சுமார் 50 கிலோ எடைக்கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆந்திராவுக்கு கடத்த முயன்ற மொத்தம் 7 டன் அரிசி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்