search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து- சிகிச்சை பெற்ற மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
    X

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து- சிகிச்சை பெற்ற மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    • விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கனஞ்சாம் பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

    கடந்த 19-ந் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி, அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

    வெடி விபத்தில் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி (வயது26), மாரிமுத்து (50), ராஜ்குமார் (35) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். 60 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்த இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 21-ந் தேதி மாரிமுத்து, கருப்பசாமி ஆகிய 2 பேர் பரிதாபமாக இருந்தனர்.

    ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய 5 பேரும் பலியாகி இருப்பது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஏற்கனவே வெம்பக் கோட்டை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரர் கந்தசாமி, போர் மேன் கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×