search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் சப்பர வீதி உலா
    X

    செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் சப்பர வீதி உலா

    • கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை- இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கீழத்தெரு சேனைத் தலைவா் சமு தாயம் சார்பில் கொடை விழா நடை பெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்யகல்யாணி அம்மன், பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா நேற்று நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்கும அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நள்ளிரவு செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் நித்யகல்யாணி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயத்தினர், இளைஞர் சங்கத்தினர், விழா கமிட்டியினா் செய்திருந்தனர்.

    Next Story
    ×