என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் கடும் கடல் சீற்றம்
- கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது.
- மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள "மாண்டஸ்" புயலால் இன்று காலை முதல் மாமல்லபுரம் பகுதியில் மழை பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுகின்றன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல்நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றன. மீனவர்கள் தங்களது படகுகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர்.
இருந்தும் கடலின் சீற்றத்தால் சில படகுகள் சேதமடைந்து கடலுக்குள் இழுத்து செல்லபட்டது. தொடர்ந்து கடல் அலை கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடற்கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.






