search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக்கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தலைமையில் நடந்தது.

    வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக்கூட்டம்

    • மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
    • பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கலையொட்டி பெறப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில் நடந்தது.

    மாவட்ட தேர்தல் அலுவ லரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2023ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்ததிற்கான படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023ம் தேதியினை தகுதி நாளாகக்கொண்டு நவம்பர் 9-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை 1880 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடந்தது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் குறித்து மொத்தம் 75,824 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

    மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×