என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக்பள்ளி 10 ஆண்டுகளாக தொடர்ந்து கல்விசேவையில் முதலிடம்
- சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக்பள்ளி 10 ஆண்டுகளாக தொடர்ந்து கல்விசேவையில் முதலிடம் பிடித்துள்ளது,
- மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து எங்கள் பள்னி மாணவர்கள் சாதனை டைத்து வருகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள நியூபவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து கல்விப்பணியில் மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது.
இது குறித்து பள்ளி நிறுவனர் பெரியசாமி கூறுகையில், எங்கள் பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு தொடக்கம் முதல் இன்று வரை கடைசி மாணவனும் முதல் மாணவனாக திகழ அரும்பாடுபட்டு சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் அனைவரும் சிறந்த கல்வி வல்லுநர்களாக அரசுப்பணியில் உயர் பதவியில் உள்ளனர். மேலும் மருத்துவம், பொறியியல் வேளாண்மைத்துறை போன்ற பல்வேறு படிப்புகளில் முதன்மை மாணவர்களாக இருந்து வருகின்றனர்.
அனைத்து கல்வி ஆண்டுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சியோடு மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து எங்கள் பள்னி மாணவர்கள் சாதனை டைத்து வருகின்றனர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என தெரிவித்தார்.






