search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
    X

    செங்கோட்டை பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேங்காய் மாலையால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து அருள்பிரசாதம் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதேபோல் செங்கோட்டை சுற்றுப்பகுதிகளான வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவபிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×