என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.18 லட்சம் பணம் மோசடி
    X

    ஓசூர் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.18 லட்சம் பணம் மோசடி

    • நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
    • தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.

    கிருஷ்ணகிரி, மே.18-

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரெயில்வே நிலையம் அருகே வசித்து வருபவர் வள்ளுவன். இவரது மகள் மெல்பா (வயது28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் நிறுவனத்தில் குறைந்த முதலீடு செய்தால்

    அதிகம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

    இதே போல் சாமந்தமலை அருகேயுள்ள குட்டூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (28). இவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நீங்கள் 2 கோடி பரிசு பெற்றுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் உடனடியாக போன்று செய்தார். அதில் அவர் உங்களுக்கு 2 கோடி பணம் வேண்டும் என்றால் உடடியாக நீங்கள் 7.50 லட்சம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனால் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×