search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலத்தில் கழிவு நீர் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம்
    X

    கழிவுநீர் வெளியேறுவதை படத்தில் காணலாம். 

    சின்னசேலத்தில் கழிவு நீர் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம்

    • கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இயங்கி வரு கிறது. இதில் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். கட்டிட த்தின் பின்புறம் செப்டிக் டேங்க் ஒன்று உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவு நீர் அந்த செப்டிக் டேங்குக்கு செல்கிறது. இந்த கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கழிவறையில் இருந்து வரும் கழிவு நீர் செப்டிக் டேங்கில் வந்து சேர்கிறது. இந்நிலையில் செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் சுகாதார கேடு ஏற்படவும் அதிக அளவு வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமில்லாமல் இந்த செப்டிக் டேங்க் அருகில் தீயணைப்பு துறை உள்ளது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சின்னசேலம் பகுதியில் ஏற்படும் விபத்து களை தடுக்க செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வருகிறது அந்த மனித கழிவுநீர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.

    Next Story
    ×