search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மழைநீர் கால்வாயில் விழுந்த குதிரை மீட்பு
    X

    திருவள்ளூர் அருகே மழைநீர் கால்வாயில் விழுந்த குதிரை மீட்பு

    • மழை நீர்வரத்து கால்வாய் பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது.
    • குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சின்ன ஈக்காடு பகுதியில் மழை நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த பள்ளத்தில் குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குதிரையால் மேலே வர முடியவில்லை. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி, சிவக்குமார், அன்பரசு, சிலம்பரசன் அங்கு விரைந்து வந்து கயிறு கட்டி குதிரையை பத்திரமாக மீட்டனர். இந்த குதிரை கடந்த இரண்டு நாட்களாக பள்ளத்தில் விழுந்து சிக்கி இருப்பது தெரிய வந்தது. குதிரை யாருக்கு சொந்தமானது என்று தீயணைப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×