search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா
    X

    கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா

    • கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.பெருமாள் தலைமை ஏற்று தேசிய கொடியினை ஏற்றினார். கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் பெருமாள் மாணவர் களிடையே பேசும்போது தாய்மொழி யையும் தாய்நாட்டையும் அனைவரும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

    கல்வியின் பயன் தன்னை உருவாக்கிய தாய்நாட்டிற்கு பயன் பெறுமாறு மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிந்து நம் நாட்டை வல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும். ஜெய் ஜவான், ஜெய்கிசான் என முன்னாள் பிரதமர்லால்பகதுர் சாஸ்திரி கூறியது போல அனைவரும் ராணுவத்தினரையும், விவசாயிகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

    மாணவர்கள் எங்கு பயில்கிறார்கள் என்பதை விட கல்வியை எவ்வாறு கற்கிறார்கள் என்பது முக்கியமாகும் என்று வாழ்த்தினார். இவ்விழாவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×