என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் திருமணத்தை மறைத்து இளம் பெண்னை திருமணம் செய்த வாலிபர் கைது
    X

    கோப்புப்படம்

    முதல் திருமணத்தை மறைத்து இளம் பெண்னை திருமணம் செய்த வாலிபர் கைது

    • 15 பவுன் நகையை பறித்துக் கொண்டதாக போலீசில் புகார்.
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 31). இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவருக்கும் ஜெகநாதன்தெருவில் உள்ள சரவணன் மகள் அனுபிரியா ( 21 ) என்பவரு டன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 3 வருடங்களாக பழகி வந்தனர். ஆசை மேலும் தனக்குதிருமணம்நடந்ததை மறைத்துபழகிவந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அனுபிரியாவை அழைத் துக்கொண்டு கணேஷ் கிருஷ்ணகிரிக்கு சென்று அவரை திருமணம் செய்து, அங்கேயே வசித்து வந்தனர்.

    அனு பிரியாவை காணவில்லை என அவரது தாயார் கீதா ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அனு பிரியாவை தேடி வந்தனர். இந்த நிலையில் அனுப்பிரியா தனது தாயாருக்கு போன் மூலம் நலம் விசாரித்துள்ளார். அப்போது கணேசன் அனுப்பிரியா திருமணம் செய்துள்ளதை அறிந்த அவரது தாயார் நீ திருமணம் செய்துள்ள கணேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்று கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுப்பிரியா எதுவும் தெரியாதது போல் நடித்து கணேசை ஆற்காட்டிற்கு அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் பிடித்து கொடுத்துள்ளார். மேலும் கணேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்றும் 15 பவுன் நகையை பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×