search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு
    X

    தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு

    • வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்
    • திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மகன் பரிதாபமாக இறந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தலங்கை ரயில் நிலையம் அருகே உள்ள கீழ்கரடிகுப்பம் கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (75). வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று மதியம் இறந்தார்.

    இதையடுத்து தாயின் சடலத்தை பார்த்து அழுதுகொண்டிருந்த அவரது மகன் குமார் (45) என்பவருக்கு மாலை 7 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, உறவினர்கள் அவரை வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரைப்பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குமார் இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர்.

    தாய் இறந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மகனும் இறந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×