search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய லாரி பறிமுதல்
    X

    மண் கடத்திய லாரி பறிமுதல்

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீஸ் விசாரணை

    அரக்கோணம்,

    அரக்கோணம் அருகே கிழவனம், கெடவாரி கண்டிகை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெட்டைகுளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு லாரி நின்றிருந்தது. லாரி அருகே போலீசார் சென்றபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த

    போது அரசு அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×