என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
- துண்டு பிரசுரம் ஆணையர் வழங்கினார்
- நகராட்சி ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் மக்கும் குப்பை , மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . முன்னதாக பொது மக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தூய்மைக்கான உறுதி மொழி எடுத்து கொண்டனர் .
தொடர்ந்து அசோக் நகர் குடிநீர் ஏற்றும் நிலையத்தில் மரக் கன்றுகள் நடும் விழாவும் , ஏ.என்.கன்டிகை பகுதியில் மழைநீர் கால்வாய் தூய்மை பணியும் மேற்கொண்டனர் . நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் , சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் .
Next Story






