search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் மின்கம்பம்
    X

    ஆபத்தான நிலையில் மின்கம்பம்

    • பலமுறை அறிவுறுத்தியும் நடவடிக்கை இல்லை
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சின்ன தெரு பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு மின்கம்பம் ஒன்று அமைத்தனர்.

    இப்போது அந்த மின்கம்பம் பழுதாகி துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது.

    அதை காங்கிரட் மின்கம்பமாக மாற்ற பலமுறை அறிவுறுத்தியும் மின்சார வாரியம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் போது பெரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×