என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ்காரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). ஓய்வு பெற்ற போலீஸ் காரர். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு யுகானந்தன் (வயது43) என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே ஒரே வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கீழே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேல் தளத்தில் உள்ள வீட்டில் 3 அறைகள் இருக்கின்றன. இதில் ஒரு அறையில் சந்திரனும், சந்திராவும் மற்றொரு அறையில் யுகானந்தனும், கலைச்செல்வியும் . குழந்தைகள் இருவரும் இன்னொரு அறையிலும் தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதால் அந்த அறையில் பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்கள் அனைவரும் அவர்களது அறைக்கு தூங்கச் சென்றனர். அப்போது காலியாக இருந்த அறையில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். புழுக்கம் அதிகமாக இருந்தால் சந்திரன் வெளியே எழுந்து வந்தார்.
அப்போது வீட்டின் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்