என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முடி திருத்தம் தொழிலாளர்கள் மனு
- நெமிலி ஒன்றிய குழு தலைவரிடம் வழங்கினர்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்க ளான அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், கீழ் வீதி, சம்பத்துராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலும் சொந்த வீடு இன்றி வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நெமிலி முடிதிருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு விடம் வழங்கினர்.
இதில் துணை குழு தலைவர் தீனதயாளன், முடி திருத்தும் தொழிலாளர் நாவிதர் நலச்சங்க தலைவர் ஏகாம்பரம், செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் பெருமாள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களும் உடனிருந்தனர்.
Next Story






