என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரோப் கார் பணியை அமைச்சர் காந்தி ஆய்வு
- பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
- ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஓய்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட உள்ளிட்ட பல்வேறு பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 மாதங்களில் ரோப்கார் துவக்கப்பட உள்ள நிலையில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் 65 ஆண்டுகளுக்கு பிறகு யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேக நடைபெற உள்ளது.
இத்திருப்பணிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். அப்போது கோவில் உதவி ஆணையர் ஜெயா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story






