என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிக்கு திருமணம்
- வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி. இவர் வாலாஜா அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துள்ளார். வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 25-ந் தேதி நெமிலி அருகே உள்ள கோவிலில் வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சோளிங்கர் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த ஊர் நல அலுவலர் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி திருமணம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






