என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏரியில் ஆண் பிணம்
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அருகே சென்ன சமுத்திரம் கிராம ஏரியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






