search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்தல் தகவல்
    X

    கோப்புப்படம்

    ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்தல் தகவல்

    • வருகிற 1-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும்.
    • இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் டபிள்யு. ஆர்.சி.பி திட்டத்தில் உள்ள ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 20-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேட்பு மனுக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும்.

    வருகிற 1-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். 8-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்பு மனுக்களின் பட்டியல் வெளியிடப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். 4 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    20-ந்தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.மாலை 4 மணி முதல் வாக்கு எண்ணுதல் மற்றும் முடிவுகள் அறிவிக்கும் பணி நடைபெறும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    Next Story
    ×