search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கொலையில் கணவரிடம் விசாரணை
    X

    பெண் கொலையில் கணவரிடம் விசாரணை

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 40).இவரது மனைவி சரிதா (27). இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த இவர்கள் தற்போது பூட்டுத்தாக்கில் தங்கி பெருமுகையில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் சரிதா எந்நேரமும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.இந்த நிலையில் சரிதா கடந்த 25-ந் தேதி காணாமல் போனதாக ராமு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராமு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பகுதி மக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராமுவின் வீட்டு வளாகத்தில் உள்ள உரை கிணற்றில் பார்த்தபோது மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த மூட்டையை வெளியே எடுத்துபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது காணாமல் போன சரிதாவின் உடல் என தெரியவந்தது.

    இதையடுத்து சரிதாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரிதா எந்நேரமும் செல்போனில் பேசி வந்ததால் அவரது கணவர் சரிதாவை கொலை செய்து கிணற்றில் வீசினாரா என சந்தேகத்தின் பேரில் ராமுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×