search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் உணவுத்துறை அதிகாரி ஆய்வு
    X

    கடைகளில் உணவுத்துறை அதிகாரி ஆய்வு

    • பானிபூரியில் அட்டைப்பூச்சி
    • உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா பெரியார்நகரில் ஆற்காடு - ஆரணி சாலையில் ஒருவர் பானிபூரி விற்று வருகிறார்.

    அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பானிப்பூரி பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரித்து தனது குழைந்தைக்கு ஊட்டினார்.

    அப்போது பானிபூரியில் அட்டைப்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது போன்று அஜாக்கிரதையாக செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆற்காடு உணவுத்துறை அதிகாரி கந்தவேல் நேரில் சென்று பார்வை விட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவு தயாரிப்பு பாதுகாப்பு சான்று மற்றும் சுகாதார சான்று வழங்கவில்லை பானிபூரி உரிமையாளர் பழனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் உணவுத்துறை அதிகாரி கந்தவேல் தெரிவித்தார்.

    Next Story
    ×