search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
    X

    பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரங்கள்.

    3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

    • பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தோரத்தெருவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.6 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் இதனை சீர்செய்யாமல் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த 3ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளதாகவும் எந்திரப்பழுதை சரிசெய்து குடிநீர் வழங்குமாறு பலமுறை அப்பகுதியினர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.

    பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாகவும் தற்போது கோடைகாலம் தொடங்கவுள்ள சூழலில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×