search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    ராணிப்பேட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    • ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ராணிப்பேட்டை :

    மத்திய அமலாக்கத்துறை ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும் மேலும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ராணி ப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை வேம்புலியம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடை பெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் மோகன், நாகேஷ், வசீகரன் நியாஸ், நகர நிர்வாகிகள் உத்தமன், மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×