என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலவை பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜைகள் நடந்தது.
- மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் பள்ளாங்குட்டை யில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் கணபதி ஹோமம், நான்கு கால பூஜை கள் நடந்தது.
யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் பொன்னியம்மன் கோவில் விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகா கும்பா பிஷேகத்தை நடத்தினர் . மாலை அம்மனுக்கு திருக்கல் யாணம் நடந்தது.
அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலாவுக்கு முன் னால் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. வாண வேடிக்கைகள் நடந்தது.
விழாவை பொன்னியம் மன் ஆலய அறக்கட்டளை குழுவினர் செங்குந்தர் மரபினர், ஊர் பொதுமக்கள் முன் னின்று நடத்தினர்.
Next Story






