என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்
- சிறப்பான சேவை அளிக்க அறிவுரை
ராணிப்பேட்டை:
வாலாஜா தலைமை மருத்துவமனையில் 24 மணிநேர பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை கள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மன நல பிரிவு, சித்தா, நேச்சுரோபதி, பல் மருத்துவம், தோல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அரசு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பேர் புறநோயாளிகள் பிரிவிலும், உள்நோயாளிகள் பிரிவிலும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்று டாக்டரிடம் தெரிவித்தார்.
Next Story






