என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒலிம்பியாட் போட்டி பார்வையிட மாணவர்களுக்கு செஸ் போட்டி
    X

    மாணவர்களுக்கு செஸ் போட்டி நடந்த காட்சி.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒலிம்பியாட் போட்டி பார்வையிட மாணவர்களுக்கு செஸ் போட்டி

    • 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது
    • 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது

    ராணிப்பேட்டை:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பார்வையிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 116 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 13.07.2022 முதல் 15.07.2022 வரை 1-5 ம் வகுப்பு வரை , 6 - 8 ம் வகுப்பு வரை 9:10 ம் வகுப்பு மற்றும் 11-12 ம் வகுப்பு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது .

    இதில் 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி அளவில் மட்டும் போட்டிகள் நடத்தப்பட்டது.

    6 -ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை . 9.10 -ம் வகுப்பு மற்றும் 11.12 -ம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்கள் தனித்தனியே வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    வட்டார அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 6-12 -ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் தனித்தனியே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர் .

    இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களைப் பெறும் 6 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் 2 பேர் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வர்.

    மாவட்ட அளவில் முதல்2 இடங்களை பெறும் 9.10 மற்றும் 11.12 -ம் வகுப்பு ஆகிய இரு பிரிவு மாணவ , மாணவியர்கள் மகாபலிபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை 7.08.2022 அன்று பார்வையிட செல்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×