search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்
    X

    தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்

    • அடையாளம் தெரியவில்லை
    • ரெயில்வே போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட் பட்ட திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலைய பகுதியில், திருப்பதி - அரக் கோணம் மார்கத்தில் உள்ள தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×