என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் தீயணைப்பு துறையினர் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்த காட்சி.
தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வு
- முதலுதவி செய்வது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கும் முறைமைகள், விபத்து ஏற்பட்டால் எப்படி தீவிபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவது.
தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு முதலில் தகவல் கொடுப்பது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்வது எப்படி என கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியர் மேரிஷேரின் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் பஸ் நிலையத்தில் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள், கடைகள், பஸ் டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ மற்றும் விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் அப்போது தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.






