என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்
    X

    ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.7 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • புதியதாக 2195 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது

    நெமிலி:

    நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நெமிலி பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த அம்ரூத் 2.0 குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதியதாக 2195 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

    இப்பணிகள் ஓராண்டு பணிக்காலத்திற்குள் முடிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் (பொறுப்பு) அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், துணைதலைவர் சந்திரசேகர், நெமிலி ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் ரவீந்திரன் (மேற்கு), பெருமாள் (மத்தியம்), நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×