என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் குறித்த 2 நாட்கள் பயிற்சி
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது
- அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23-ம் ஆண்டிற் கான பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் பயிர் மதிப்பீட்டாய்வு திட் டம் குறித்து வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வரு வாய் துறையினருக்கு 2 நாட்கள் பயிற்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண் டியன் தலைமை தாங்கி, பயிற் சியை தொடங்கி வைத்தார்.
பயிற்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை துறைகளை சேர்ந்த களப்பணியாளர்களுக்கு பயிர் அறுவடை பரிசோ தனை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் ( பொறுப்பு) விஸ்வநாதன், புள்ளியியல் துணை இயக்கு னர் ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், புள்ளியியல் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






