search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமரியில் வருகிற 15-ம் தேதி ரெயில் மறியல் போராட்டம்
    X

    தருமரியில் வருகிற 15-ம் தேதி ரெயில் மறியல் போராட்டம்

    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது.
    • வருகிற 25 முதல் 28-ம் தேதி வரை சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து வருகிற 15-ம் தேதி தருமபுரியில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது, இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது.

    தொடர்ந்து வருகிற 25 முதல் 28-ம் தேதி வரை சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டங்கள் நடத்துவது, அதானி விவகாரத்தில் பிரதமருக்கு போஸ்டு கார்டு அனுப்பும் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு திருமணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தீத்தராமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கர், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பிற்பட்டோர் அணி தலைவர் நவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் வட்டார தலைவர்கள் வேலன், காமராஜ், மணி, ஞானசேகர், வஜ்ஜிரம், சந்திரசேகர், வெங்கடாச்சலம், சிலம்பரசன், ராஜேந்திரன் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், மாவட்ட பிற்பட்டோர் அணி தலைவர் நவீன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சிவலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலீபன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராமசுந்தரம், நகர தலைவர்கள் கணேசன், குமரவேல், மாணிக்கம், ஜெயபால், முருகன், ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தருமபுரி நகர தலைவர் வேடியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×