search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    புதுக்கோட்டை

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள கோரையாற்று பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனையிட்டபோது அதில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ½ யூனிட் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய டிராக்டர் உரிமையாளர் சாமிஉரணிப்பட்டி ஆறுமுகம் மகன் ரவி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்"

    Next Story
    ×