search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டெய்னர் உரசி மின் வயர் அறுந்தது:  ெபாதுமக்களிடமிருந்து தப்பிக்க வேகமாக சென்ற லாரி டிரைவர் விபத்தில் சிக்கி பலி
    X

    கண்டெய்னர் உரசி மின் வயர் அறுந்தது: ெபாதுமக்களிடமிருந்து தப்பிக்க வேகமாக சென்ற லாரி டிரைவர் விபத்தில் சிக்கி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாரி டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார்
    • ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

    விராலிமலை:

    சென்னையிலிருந்து மதுரைக்கு டிராக்டர்களை ஏற்றுவதற்காக உத்திர பிரதேச மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி விராலிமலை அருகே உள்ள கல்குடி வழியாக சென்றது. லாரியை உத்திர பிரதேச மாநிலம் சபியுல்லா மகன் சகீர் அகமத்(வயது39) ஓட்டினார். இந்நிலையில் அந்த கண்டெய்னர் லாரி விராலிமலை காமராஜர் நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் வயர் மீது உரசியதில் மின் வயர் அருந்தது. இதனை கவனிக்காமல் லாரியை ஓட்டுனர் இயக்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விரட்டி சென்று முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அந்த கண்டெய்னர் லாரியை மறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் வாக்குவாதம் முற்றியதில் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக கண்டெய்னர் லாரியை சகீர் அகமத் வேகமாக எடுத்து விராலிமலை-மதுரை சாலையில் ஓட்டி சென்றார். அப்போது ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சகீர் அகமத் அதிர்ச்சியில் வலிப்பு வந்து உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் லாரியை துரத்தி சென்ற அசோக்குமார் மகன் ஹரிஹரன், ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன், செபஸ்டின் மகன் ஆரோக்கிய ஜார்ஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


    Next Story
    ×