என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
    X

    புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • விழாவிற்கு வருகை தர உள்ள அனைத்து சமூக மாநில தலைவர்களை புதுக்கோட்டை நகரம் திருக்கோகர்னத்தில் சிறப்பாக வரவேற்பது குறித்து ஆலோசிக்கபட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மரக்கடை சந்து 5ம்வீதியில் உள்ள நமது மக்கள் கட்சி அலுவலகத்தில் எஸ்.எப்.ஆர்.பி.சி. மத்திய மண்டல தலைவர் திருச்சி மணிவேல் தேவர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க செயலாளர் நிலாமணியன், தென்னிந்திய யாதவ மகாசபை மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, வீர சைவ பேரவை மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், நாயுடு சங்க மாவட்டத் துணைச்செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மண்டல துணைத் தலைவர் சின்னத்தம்பி யாதவ் வரவேற்றுப் பேசினார். இதில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் மோகன், ஐயப்பன், நாயுடு சங்கம் தேவராஜன், வீர சைவ பேரவை மாவட்ட பொருளாளர் சதாசிவம், அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் வீர சைவ பேரவை ஜெயராமன், மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஸ்வர்மன், அலுவலக செயலாளர் செல்ல விக்னேஷ், மஞ்சாடியார், பூவரசகுடி முருகேசன், அறந்தை பாலகுமாரன், முத்துப்பாண்டி மற்றும் கள்ளர், மறவர், அகமுடையார், பார்க்கவ குல உடையார், யாதவர், முத்தரையர், அனைத்து வல்லநாடு செட்டியார் நல சங்கம், வெள்ளாளர் வேளாளர் சங்கம், நாயுடு வீர சைவ பேரவை பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய மண்டல செயலாளர் டாக்டர் சரவண தேவா பேசுகையில்:-வரும் ஜனவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் மேனாள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் இரத்தின சபாபதி ஆலோசனைப்படி கொடியினை ஏற்றி பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், விழாவிற்கு வருகை தர உள்ள அனைத்து சமூக மாநில தலைவர்களை புதுக்கோட்டை நகரம் திருக்கோகர்னத்தில் சிறப்பாக வரவேற்பது எனவும், நமது 256 சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுத்து சட்டப் போராட்டங்களில் வாயிலாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றது. தற்போது ஒன்றிய அரசு அமல்படுத்திய உயர் ஜாதியினர் மாத வருமானம் 66 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கிட எதிர்த்து வழக்காடி இன்றுவரை தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நமது பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு போன்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×