search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1 கோடி கையெழுத்து இயக்கம்
    X

    1 கோடி கையெழுத்து இயக்கம்

    • போதைக்கு எதிராக பொதுமக்களிடம் நடத்தப்பட்டது
    • நான்கு இடங்களில் நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒவ்வொரு தாலுகாவாக போதைக்கு எதிராக போதை கலாச்சாரத்தால் சீரழியும் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் வல்லத்திராரக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், ராஜஜெயரஞ்சன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், வேங்கிடகுளம் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்ம, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஆலங்குடி மருத்துவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நான்கு இடத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் மேல தாளங்கள் முழங்க நடன இயக்கத்துடன் அந்தந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஒலி பெருக்கி வாகனத்தில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.

    Next Story
    ×