என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    செங்கல்பட்டு குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    • குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக அரசு மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்க ஏற்கனவே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் மதுக்கடை திறக்கப்பட்டது.

    இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    'குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏற்கனவே வல்லம் பகுதியில் மதுக்கடை இருந்தது. பின்னர் அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    தற்போது மீண்டும் இங்கு மதுக்கடை திறந்து உள்ளனர். இதனை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.

    Next Story
    ×