என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை
    X

    ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை

    • ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மருதபாண்டியன் மனைவி பிரபாவதி (வயது 23). ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக பிரபாவதி கர்ப்பம் அடைந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரபாவதி பிரசவத்திற்காக லெப்பைகுடிகாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரபாவதியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து மருத்துவ உதவியாளர் இளையராஜா பிரசவம் பார்த்தார். இதில் பிரபாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் நலமாக உள்ளனர்."

    Next Story
    ×