search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச பயிற்சி பெற நேர்முகத் தேர்வு
    X

    இலவச பயிற்சி பெற நேர்முகத் தேர்வு

    • இலவச பயிற்சி பெற நேர்முகத் தேர்வு நடைபெறுகிது
    • அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மெழுகுவர்த்தி தயாரித்தல் குறித்த தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பின் போது காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும் வங்கிக்கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

    இப்பயிற்சியில் பங்கேற்க 19 முதல 45 வயதுக்குட்பட்ட எழுதப்படிக்க தெரிந்த சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புறத்தினருக்கு முன்னுரிம அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் பயிற்சி மையத்தில் இன்று நடைபெறும். நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். என மைய இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×