என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 32 பேர் கைது
- மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெரம்பலூர் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று சீராக குடிநீர் விநியோகம் செய்ய கோரி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரனிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்ம் குடிநீர் வரி வசூலிப்பதை கைவிடக்கோரியும் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






