search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மக்களை தேடி திட்டம்: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை மேயா் பிரியா பெற்றார்

    • 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
    • நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் மக்களைத்தேடி மேயர் என்ற திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.

    இதுவரை ராயபுரம், திரு.வி.க.நகர், அடையாறு மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 889 மனுக்கள் பெறப்பட்டு அதில் 720 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 4-வது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது மேயர் பிரியா மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் எந்திரம், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் பிரியா வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×