search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சேதமடைந்த நடைபாதையால் பயணிகள் அவதி
    X

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் நடைபாதையை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சேதமடைந்த நடைபாதையால் பயணிகள் அவதி

    • கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
    • பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காணப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பஸ்நிலை யத்திலிருந்து மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய முக்கிய பெரும் தொழில் மாநகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மாவட்டங்களை இணை க்கும் முக்கிய பால மாக திண்டுக்கல் பஸ்நிலையம் திகழ்ந்து வருகிறது.

    இங்கிருந்து தேனி, மதுரை, திருச்சி, காரைக்குடி ஆகிய பல்வேறு பகுதி களுக்கு நாள்தோறும் ஆயிர க்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். வேலைக்கு செல்வோர் விவசாயிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் என பலதர ப்பட்ட மக்கள் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூடுகின்ற னர்.

    மேலும் தற்போது சீசன் காலம் என்பதால் மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வட மாவட்டங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் வந்து செல்கின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காண ப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த கற்களால் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்படுகிறது.

    இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×